பிடித்த்த்த கடற்கரை ..... கடலூர்
வெள்ளி கடற்கரை, அது வேறொன்னுமில்லீங்க, நினைத்த மாத்திரத்தில்
'டக்'கென போய்விடலாம். கஸகஸன்னு கூட்டமும் இருக்காது, அதனால நல்லா ஜாலியா
சுத்திசுத்தி வரலாம்.
முன்பெல்லாம் பெரியார் கலைக்கல்லூரி வரைக்கும்தான் பேருந்து, ஆட்டோ
எல்லாம் போகும். அதற்குமேல் நடைவண்டிதான். ஒரு காக்கா, குருவிகூட
இருக்காது. போகவே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.
ஆனால் மே மாதத்தில் மட்டும் முதல் மூன்று(ஐந்து?) நாட்கள் கோடைவிழா நடக்கும் சமயத்தில் அங்கே கூட்டம் அலைமோதும்.
இப்போது
எல்லாமும் மாறிவிட்டன. கடற்கரை வரை வாகனங்கள் செல்ல சாலை வசதி உள்ளது. அதேபோல் குட்டீஸ்களுக்கு
விளையாடுமிடமும் உள்ளது. சாதாரண நாட்களிலேயே மக்கள் வந்த வண்ணமுள்ளனர்.
நண்பகல் நேரம், இருட்டிக்கொண்டு, தூறல்வேறு வந்ததால் வெறிச்சோடிக் கிடக்கும் சிறுவர் விளையாடுமிடம்.
வாங்க, அப்படியே நாமும் காலாற நடந்து கடலையும், அலையையும் ரசிப்போம் !
கரையில் மோதி உள்வாங்கும் அலை !!
அலை போனபின் ..... ஹைய்யோ !! ஆனால் உயிருடன் இருந்ததால் எடுக்கவில்லை !
அலையில் ஆட்டம் போட்ட மூன்று சிறுவர்கள் !
அலைபேசியில் படமெடுக்கவும் 'என்ன எடுங்க, என்ன எடுங்க" என அம்மூவரில் இருவர் மட்டுமே போஸ் கொடுத்தனர்.
மூன்றாமவருக்கு ஆசையும் வெட்கமும் போட்டிபோட .... ஹா ஹா .... ஆசை வென்றுவிட்டது.
கூட்டம் இல்லாததால், "இன்றைக்கு வருமானம் அவ்வளவுதான்' என்ற சோகத்தில் !!
மேலும் சில படங்கள் அடுத்த பதிவில் ....